×

காரைக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று கொட்டித் தீர்த்த மழை: பூமி குளிர்ந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர்/ காரைக்குடி: காரைக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று காலை கொட்டித் தீர்த்த மழையால் பூமி குளிர்ந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது; அனல் காற்று வீசியது. இந்த நிலையில், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. இதன்படி, நேற்று மாலை சிறிது நேரம் மழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில், இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

காலை 8 மணியில் இருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், பூமி குளிர்ந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளான கழனிவாசல், பள்ளத்தூர், கோட்டையூர், கோவிலூர், அரியக்குடி, ஸ்ரீராம் நகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே இடி மின்னலுடன் மழை பெய்தது. கடந்த இரண்டு மாதங்களாக மழையே இல்லாமல் வறண்ட வானிலை நிலவியது. கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் வெப்பம் அதிகரித்து 100 டிகிரிக்கு மேல் பதிவானது. இந்நிலையில் இன்று காலை பெய்த கோடை மழையால் வெப்பம் தணிக்கப்பட்டு, குளுமையான சூழல் உருவாகியுள்ளது. வறண்டு கிடந்த நீர்நிலைகளுக்கு சற்று நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

Tags : Karaikudi ,Srivilliputhur ,earth ,Srivilliputhur, ,Virudhunagar district ,Tamil Nadu's… ,
× RELATED ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் ரூ.4.30 கோடி...