×

எப்சிஆர்ஏ திருத்த மசோதா மோடி, பாஜவின் உண்மையான நோக்கத்தை காட்டுகிறது: காங். தலைவர் கார்கே விமர்சனம்

புதுடெல்லி: எப்சிஆர்ஏ மசோதா 2026 பாஜ மற்றும் மோடியின் உண்மையான நோக்கத்தை வௌிப்படுத்துகிறது என கார்கே விமர்சித்துள்ளார். இந்தியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வௌிநாடுகளில் இருந்து வரும் நிதியை முறைப்படுத்த ஒன்றிய அரசு, வெளிநாட்டு நிதி பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2026ஐ கொண்டு வந்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.

கேரளா சட்டப்பேரவை தேர்தைலையொட்டி இடுக்கி பேரவை தொகுதியில் நேற்று நடந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி பிரசார பொதுக்கூட்டத்தில் கார்கே கலந்து கொண்டார். அப்போது பேசிய கார்கே, “புதிய எப்சிஆர்ஏ 2026 மசோதா ஒரு சீர்திருத்தம் அல்ல. மாறாக, இது கிறிஸ்தவ நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகத்தின் மீதான நேரடி தாக்குதல். கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சிக்கிறார். இந்த மசோதா பாஜ மற்றும் பிரதமர் மோடியின் உண்மையான நோக்கத்தை வௌிப்படுத்துகிறது” என விமர்சித்துள்ளார்.

Tags : Modi ,BJP ,Congress ,Kharge ,New Delhi ,Union government ,India ,
× RELATED ஈரான் போரால் பொருளாதார நெருக்கடி...