- ரமேஷ் பிஷாராடி தடலாடி
- பாலக்காடு
- கேரளா
- ரமேஷ் பிஷாராடி
- காங்கிரஸ் கூட்டணி
- ஷோபா சுரேந்திரன்
- பி.ஜே.பி கூட்டணி
- இடது…
கேரள மாநிலம் பாலக்காடு தொகுதி ஒரு நட்சத்திர தொகுதியாக கருதப்படுகிறது. இங்கு காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரபல மலையாள நகைச்சுவை நடிகரும், டைரக்டருமான ரமேஷ் பிஷாரடி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முக்கிய வேட்பாளர்களாக பாஜ கூட்டணி சார்பில் ஷோபா சுரேந்திரனும், இடதுசாரி கூட்டணி சார்பில் ரசாக்கும் களத்தில் உள்ளனர். இங்கு மும்முனைப் போட்டி நிலவுவதால் இந்தத் தொகுதியில் தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் பிஷாரடி வடக்குந்தரை என்ற பகுதிக்கு பிரசாரம் செய்ய சென்றபோது பாஜவினர் அவரை தடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பாலக்காடு தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவான ராகுல் மாங்கூட்டத்தில் மீதான பலாத்கார புகார் குறித்து ரமேஷ் பிஷாரடியிடம் நிருபர்கள் கேட்டபோது, அது அவருடைய தனிப்பட்ட விஷயம் என்று கூறினார்.
ரமேஷ் பிஷாரடியின் இந்த கருத்து பெண்களை அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி பாஜ சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. தன் மீது பாஜ கூறியுள்ள புகார் குறித்து ரமேஷ் பிஷாரடி பதிலளித்து கூறுகையில், ‘‘பாஜவுக்கு எப்போதும் விவாதங்களை ஏற்படுத்தி அதில் குளிர்காய்வது வழக்கமாக இருக்கிறது.
என் மீது எதற்காக அவர்கள் புகார் கொடுத்துள்ளனர் என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். தோல்வி பயம் தான் அதற்கு காரணம். ராகுல் மாங்கூட்டத்தில் குறித்து நான் சொன்ன கருத்து எப்படி பெண்களை அவமானப்படுத்துவதாக அமையும் என்று எனக்கு புரியவில்லை’’ என்றார்.
