அந்தியூர்- பர்கூர் மலைப்பாதை வழியாக கனரக வாகனங்கள் கர்நாடகா செல்ல தடை

அந்தியூர், ஏப். 5: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் கனரக வாகனங்களுக்கு இன்று மாலை முதல் 16ம் தேதி வரை 12 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் வட்டம் கொள்ளேகால்- செல்லம் பாளையம் சாலையில் ராமாபுரம் நால்ரோடு வரையில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால், 6ந் தேதி முதல் 16ம் தேதி வரை கனரக வாகனங்களை பர்கூர் மலைப்பாதையில் தற்காலிகமாக அனுமதிக்க வேண்டாம் என சாம்ராஜ் நகர் மாவட்ட துணை ஆணையர் கேட்டுக் கொண்டார். இதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர், பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் வாகனங்கள் இன்று மாலை முதல் தடை செய்யப்படுகிறது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இதையடுத்து மாற்றுப்பாதையான திம்பம், தாளவாடி வழியாக கர்நாடக மாநிலம் செல்ல அறிவுறுத்தபட்டுள்ளது.

 

Related Stories: