புழல்: புழல் அருகே கொரட்டூர் ஏரி மழைநீர் கால்வாயில் படந்துள்ள ஆகாயத்தாமரை கொடிகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புழல் அடுத்த கதிர்வேடு, செம்பியம் மாநில நெடுஞ்சாலை அருகே கொரட்டூர் ஏரி மழைநீர் கால்வாய் மற்றும் கதிர்வேடு கட்டிட தொழிலாளர்கள் நகர் அருகே மழைநீர் கால்வாய்களில் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து, கால்வாயை இல்லாததுபோல் காட்சி அளிக்கிறது. இவ்வாறு, மழைநீர் கால்வாய்களில் ஆகாயத்தாமரைகள் வளர்வது நீடித்தால், இது ரெட்டேரியில் படந்து செல்லும் நிலை காணப்படும்
. இந்த ரெட்டேரியில் கடந்த 15ம் தேதி படகு சவாரி துவக்கப்பட்டது. இதில், ஆகாயத்தாமரைகள் குவிந்தால் சவாரி செல்வதற்கு சிரமம் ஏற்படும்.எனவே, இதற்கு சம்பந்தப்பட்ட செங்குன்றம் நீர்வளத்துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து மழைநீர் கால்வாயில் உள்ள ஆகாயத்தாமரைகளை உடனடியாக அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
