திருச்சி, ஏப்.3: தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல CGST மற்றும் மத்திய கலால் துறை சார்பாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் நடைமுறையை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல CGST மற்றும் மத்திய கலால்துறை ஒரு வலுவான, பல அடுக்கு அமலாக்கக் கட்டமைப்பைச் செயல்படுத்தியுள்ளது. வாக்காளர்களுக்குப் பொருட்கள் மற்றும் அன்பளிப்புகள் வழங்கப்படுவதைத் தடுக்கவும், தேர்தல் விதிமுறைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும். இத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
