மணப்பாறை ரவுண்டானாவில் 100 சதவீத வாக்களிக்க மெகா விழிப்புணர்வு பேனர்

மணப்பாறை, ஏப்.1: மணப்பாறை ரவுண்டானாவில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பிரம்மாண்ட பேனர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சட்டமன்ற தேர்தல் வரும் 23ம்தேதி நடைபெற உள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 100% வாக்களிப்பது குறித்து மணப்பாறை ரவுண்டானா பகுதியில் பிரம்மாண்ட அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்களையும், இளம் தலைமுறை வாக்காளர்களையும் கவரும் விதமாக அனைத்து தகுதியுள்ள வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த பேனர் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பார்வைக்காக மணப்பாறை ரவுண்டானாவில் வைக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனைத்தையும் ஈர்த்துள்ளது.

 

 

Related Stories: