கறம்பக்குடி ஏப் 3: கறம்பக்குடி பேரூராட்சி 5 வது வார்டு தட்டாவூரணியில் ரூ. 1 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் மின் மயான எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த 15 வார்டுகளிலும் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு பேரூராட்சியில் 4 ஆண்டுகளில் 15 வார்டுகளுக்கு ரூ. 25 கோடியில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கறம்பக்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2023, 24ம் ஆண்டு திட்டத்தின் கீழ் குறிப்பாக கறம்பக்குடி க்கு எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டுமென கோரிக்கைவைக்கப்பட்டது. அதன்படி ரூ. 1 கோடியே 88 லட்சம் நிதி ஒதுக்ககீடு செய்து எரிவாயு மின் தகன மேடை அமைத்த தமிழக முதல்வருக்கும் நகர் புற மேம்பாட்டு துறை அமைச்சர் கே என் நேரு, பேரூராட்சி தலைவர் முருகேசன் மற்றும் பேரூராட்சி 5 வது வார்டு கவுன்சிலர் ஜன்னத் பேகம், பேரூராட்சி நிர்வாகத்திற்கும் கறம்பக்குடி பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
