போடி, ஏப். 3: போடி நகர் போலீசார் அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆர்.ஐ.ஆபிஸ் ரோட்டில் தனியார் ஹோட்டல் அருகே 4 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் போடி அருகே மேலசொக்கநாதபுரத்தை சேர்ந்த குருநாதன் (44), போடி எண்ணெய்க்கார முத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (44), சவுடம்மன் கோவில் தெருவை சேர்ந்த முரளி (57), ஆர்.ஐ. ஆபீஸ் ரோட்டை சேர்ந்த நாகவடிவேல் (60) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து, சூதாட்ட பணம் ரூ.2500 மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
