×

தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களுடன் துணி பைகளில் ரேசன் பொருட்கள்

திருப்பூர், ஏப். 3: தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துணி பைகளில் ரேசன் பொருட்களை கலெக்டர் மனிஷ் பொதுமக்களுக்கு வழங்கினார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள திருப்பூர் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக்கடையில் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துணி பைகளில் அத்தியாவசிய பொருட்களை தேர்தல் அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான மனிஷ் பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சங்கமித்திரை, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு, மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஸ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவி இயக்குநர் (பயிற்சி) ஹர்ஷா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Tiruppur ,Manish ,Tiruppur district ,Tamil Nadu Assembly general elections ,Tiruppur… ,
× RELATED ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டரில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாம்