×

மணமேல்குடி அருகே தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

அறந்தாங்கி, ஏப்.3: மணமேல்குடி அருகே கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனாய் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மீனவர் காலனியில் தொடர்ந்து தேசிய திறனாய் தேர்வில் மூன்று வருடங்களாக மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கடந்த வருடம் வெற்றி பெற்ற மாணவர் முகம்மது அலிஃப்ரான் (2024 -2025) ஊரகத் தேர்விலும் தேர்ச்சி பெற்று உள்ளார். அதேபோல் இஸ்ரோ செல்வதற்கும் தேர்வு எழுதியுள்ளார். இந்த வருடம் முகமது அகில் (2025-2026) வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்துக்கள் கூறப்பட்டது.

இந்நிகழ்வினை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடுகள் செய்து இருந்தனர். மேலும் இந்நிகழ்வில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆசிரியர் பயிற்றுநர்கள் சிறப்பாசிரியர்கள் இயன் முறை மருத்துவர் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 

Tags : National Aptitude Test ,Manamelkudi ,Aranthangi ,Kottayapattinam ,Fisherman’s Colony Panchayat Union Middle School ,Manamelkudi Panchayat Union Middle School Fisherman ,’s Colony… ,
× RELATED அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்குப்பதிவு