புதுக்கோட்டை, ஏப்.3: புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சமீப காலமாக நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் சர்வ சாதாரணமாக இமெயில் மூலமாக வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு இமெயில் மூலமாக கடிதம் வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகளோடு வந்து நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனை செய்தனர். மேலும் மோப்பநாய் கொண்டுவரப்பட்டு ஒவ்வொரு அறை மற்றும் நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது.இந்த சோதனையில் எதுவும் சிக்காததால் இது புரளி என்று தெரியவந்தது. இருப்பினும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டாலும் நீதிமன்றத்தில் வழக்கமான பணிகள் மட்டுமல்லாது வழக்கு விசாரணையும் எந்தவிதமான தடங்கலின்றி நடைபெற்று வருகிறது. இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் நகர எல்கைக்குள் 22 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்கைக்குள் 236 வாக்குச்சாவடி அமைவிடங்கள் என மொத்தம் 258 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
