செய்யாறு, ஏப்.3: செய்யாறு அருகே தொழிலாளியின் பைக்கை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். செய்யாறு அடுத்த உக்கம்ெபரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தரன்(40), ஓட்டல் தொழிலாளி. இவர் கடந்த மாதம் 30ம் தேதி இரவு, தனது மாமாவின் பைக்கில் ஆக்கூர் கூட்ரோட்டிற்கு வந்தார். அங்குள்ள ஓட்டல் எதிரே பைக்கை நிறுத்திவிட்டு பஸ்சில் திருவண்ணாமலைக்கு சென்றார். இதையடுத்து கடந்த மாதம் 31ம் தேதி திரும்பிவந்து பார்த்தபோது, ஓட்டல் எதிரே நிறுத்தியிருந்த பைக் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து தரன், தூசி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்குப்பதிவு செய்து பைக்கை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகிறார்.
