பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்ற 142 மதுபானம் பாட்டிலுடன் பறிமுதல் மர்ம ஆசாமிக்கு வலை

வந்தவாசி, ஏப்.1: பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்ற 142 மதுபானம் பாட்டிலுடன் போலீசார் பறிமுதல் செய்து, தப்பியோடிய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர். வந்தவாசி டவுன் கோட்டை பகுதியில் மதுபானம் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக வந்தவாசி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்- இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ள சென்றனர்.
அப்போது போலீசார் வருவதைபார்த்த மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து போலீசார் அங்கிருந்த முட்புதர் பகுதியிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது மதுபானம் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்த மதுபானத்துடன் 142 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அதேபகுதியை சேர்ந்த அம்முலு மதுபானம் விற்பனை செய்வது தெரிந்தது. பின்னர், வழக்குப்பதிந்து தலைமறைவாக உள்ள அம்முலுவை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: