திருத்துறைப்பூண்டியில் ராம நவமி பெருந்திருவிழா

திருத்துறைப்பூண்டி, ஏப் 1: திருமலை திருப்பதியில் பூத்த திருத்துறைப்பூண்டி ஸ்ரீராமர் திருக்கோயிலில் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி பிறந்த ஸ்ரீராம நவமி வைபவத்தை கொண்டாடும் வகையில் நடைபெற்றது. ஸ்ரீ ராம நவமி உத்ஸவத்தை முன்னிட்டு திருமலை திருப்பதியில் இருந்து பக்தர்களால் கொண்டு வரப்பட்ட பல புண்ணிய தீர்த்தத்தால் காலை ஸ்ரீ ராமபிரானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

மாலை ஸ்ரீ சீதா ஸமேத ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி திருக்கல்யாண திருக்கோலத்துடன் ஊஞ்சல் உத்ஸவமும், பின்னர் இரவு ஸ்வாமி திருவீதி உலா புறப்பாடும் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி ஸ்ரீ பவ ஒளஷதீஸ்வர ஸ்வாமி திருக்கோயில் செயல் அலுவலர் முருகையன், திருத்துறைப்பூண்டி ஸ்ரீ ராமநாம வார வழிபாடு சபையின் சார்பாக துளசிதாஸ் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பூஜைகளை பட்டாச்சாரியார் வரதராஜன் நடத்தி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

 

Related Stories: