ேசலம் டவுன் ஆட்கொல்லி பாலத்தில் படுத்திருந்த தொழிலாளி தவறி விழுந்து பலி

சேலம், ஏப்.1: சேலம் டவுன் ஆட்கொல்லி பாலத்தில் நேற்று காலை 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் இப்ராகிம்பாதுஷா மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தினர். இறந்தவர் கிச்சிப்பாளையம் பாத்திமாநகர் தண்ணீர்டேங்க் பகுதியை சேர்ந்த அலாவுதீன் பாஷா(எ)குருவி (45) என்பது தெரியவந்தது. மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர், முள்ளுவாடி கேட் பகுதியில் டாஸ்மாக் கடை பாரில் வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மதுபோதையில் பாலத்தின் மீது படுத்துள்ளார். அப்போது அங்கிருந்து தவறி கீழே விழுந்து இறந்திருப்பது தெரியவந்தது. உடலை பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: