சிவகிரி,ஏப்.1: வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராஜா எம்எல்ஏ சிவகிரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள், சமுதாயத்தலைவர்களை சந்தித்தார். இதைதொடர்ந்து அவர் கலைஞர், பசும்பொன் முத்துராமலிங்கதேவர், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சவுக்கை சீனிவாசன், ஒன்றிய செயலாளர் பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் மனோகரன், மாநில மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி, பேரூர் பொறுப்பாளர்கள் நல்ல சிவன் கந்தவேல் சேதுசுப்பிரமணியன், மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் கிப்ட்சன், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் மணிகண்டன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார், மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர்கள் கார்த்திக், வீரமணி, முத்துலட்சுமி, விக்னேஷ்ராஜா, பொன் ரமேஷ், கிருஷ்ண லீலா, ஒன்றிய மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் ஜோதி மணிகண்டன், ராமசாமி பாண்டியன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் மருது பாண்டியன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் ராம்குமார், முனியாண்டி, பரமசிவன், துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்களை சந்தித்து ராஜா பொன்னாடை போர்த்தினார்.
வாசுதேவநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா தலைவர்கள் சிலைக்கு மரியாதை
- வாசுதேவநல்லூர்
- திமுக
- ராஜா
- சிவகிரி
- ராஜா எம்.எல்.ஏ
- மதச்சார்பற்ற முன்னேற்ற கூட்டணி
- பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
- டாக்டர் அம்பேத்கர்
