வெள்ளிச்சந்தை அருகே பீர்பாட்டிலால் வாலிபரின் மண்டை உடைப்பு

குளச்சல், ஏப்.1: வெள்ளிச்சந்தை அருகே ஆசாரிவிளை ஜவகர் காலனியை சேர்ந்தவர் செல்வன். இவரது மகன் ராஜேஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரேமண்ட் என்பவரும் ஒன்றாக மது அருந்தி கொண்டிருந்தபோது, இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ரேமண்ட், பீர் பாட்டிலால் ராஜேஷ் தலையில் தாக்கியதுடன், முகத்திலும் குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளிசந்தை போலீசார் ரேமண்ட் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: