×

குஜராத்தில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு

காந்தி நகர்: குஜராத் மாநிலம், சூரத் மாவட்டம், லிம்பாயத் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் குழந்தை உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றன. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஐந்து பேரும், உயிரிழந்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் கிடைக்கபெறவில்லை. முதற்கட்ட விசாரணையில், தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் அதிக அளவில் புடவைகள் இருந்தது தெரியவந்தது. தீ விபத்து ஏற்பட்ட உடனேயே, வீடு முழுவதும் பீதி பரவியது. தொடர்ந்து எல்லாப் பக்கங்களிலிருந்தும் புகை சூழ்ந்தது.

உயிரிழந்தவர்கள் தீ விபத்தால் ஏற்பட்ட புகையை சுவாசித்ததால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Tags : Gujarat ,Gandhinagar ,Limbayat ,Surat district of Gujarat ,
× RELATED புகை எச்சரிக்கை: லக்னோவில் அவசரமாகத் தரையிறங்கிய டெல்லி விமானம்!