திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உலகநாத நாராயணசாமி அரசினர் கலை கல்லூரியில் “தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா” சட்டமன்ற பொது தேர்தல் -2026 ஐ முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலுயுறுத்தும் விதமாக மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்பிறகு 250 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்து, ரங்கோலி கோலங்களை பார்வையிட்டுவாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, செல்ஃபி பூத்தில் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதன்பின்னர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் மூவர்ண பலூன்கள் மற்றும் ராட்சத பலூனை பறக்கவிட்டு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பழவேற்காடு கடற்கரை பகுதியில் சட்டமன்ற பொது தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலுயுறுத்தும் விதமாக நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் பார்வையிட்டு, மனித சங்கிலியில் பங்கேற்று, கடற்கரையில் உருவாக்கப்பட்ட மணற்சிற்பத்தை திறந்து வைத்து கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 நம்முடைய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் தொடங்க இன்னும் ஒரு வார காலங்கள் இருக்கும் சமயத்தில் மற்ற பணிகள் எல்லாம் தேர்தல் தொடர்பான ஆயத்த பணிகள் அனைத்தும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அவர்கள் சார்ந்த பணிகளை மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக ஸ்வீப் என்று சொல்லக்கூடிய வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை ஒவ்வொரு தொகுதியிலும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மணல் சிற்பம், மணல் ஓவியம் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக தேர்தல் தொடர்பாக உள்ள நிகழ்ச்சிகளை பிரதிபலிக்கும் வண்ணமாக மணல் சிற்பம் தமிழ்நாடு பைன் ஆர்ட்ஸ் கல்லூரி 2 மாணவர்கள் உருவாக்கி உள்ளனர். இங்கு பல்வேறு நிகழ்ச்சிகள், உதவி குழுக்களால் கோலம் இடப்பட்டு, செல்பி பூத், மனித சங்கிலி 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும். அனைவரும் எந்த ஒரு ஆட்படுதலும் இல்லாமல் சுயமாக வாக்களிக்க வேண்டும். சுத்தமாக வாக்களிக்க வேண்டும். என்ற கொள்கையோடு இந்த மனித சங்கிலி நடத்தப்பட்டது. பரத கலைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்ற உருவாக்கம் செய்யப்பட்டது. அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு கூறினார்.
