- தல்குந்தா நகராட்சி 1வது வார்டு
- தமிழ்நாடு அரசு
- தல்குந்தா மாவட்டத்தின் 1வது வார்டு
- நீல்கிரி மாவட்டம் பெல்குந்தா
- 1வது வார்டு காஞ்சிபுரம்
- கெட்சுகாட்டா
- பூத்தியாடா
மஞ்சூர் : கீழ்குந்தா பேரூராட்சிகுட்பட்ட 1வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.3 கோடியே 78 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பேரூராட்சி 1வது வார்டுக்குட்பட்ட காந்திபுரம், கெட்சுகட்டி, பூதியாடா, கண்டிமட்டம் ஆகிய கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.
காந்திபுரம் கிராமத்தில் பெரும்பான்மையாக ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக காந்திபுரம் உள்பட 1வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் நடைபாதை, தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய், தடுப்பு சுவர் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாதாதால் பொதுமக்கள் மிகவும் அவதிகுள்ளாகி வந்தார்கள். தங்களது பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக காந்திபுரம் பகுதியில் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான பேரூந்து நிழற்குடை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து 15வது நிதிகுழு திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சத்தில் தார் சாலை, ரூ.7 லட்சத்தில் குடிநீர் தொட்டி, ரூ.12.36 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு சுவருடன் கூடிய சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.
இதேபோல் அயோத்தி தாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.18.30 லட்சத்தில் நடைபாதையுடன் கூடிய கழிவுநீர் கால்வாய், இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதி மூலம் ரூ.14.30 லட்சத்தில் சமுதாய கூடம் மேம்பாடு, சிறப்பு பகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சத்தில் தடுப்பு சுவருடன் கூடிய சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.
இதேபோல் இந்த வார்டுக்குட்பட்ட கண்டிமட்டத்தில் 15வது நிதிகுழு திட்டத்தின் மூலம் ரூ.9.30 லட்சத்தில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
மேலும் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சத்தில் பூதியாடா பகுதியில் தடுப்பு சுவருடன் கூடிய சிமென்ட் சாலையும், 15வது நிதிகுழு திட்டத்தின் மூலம் ரூ.4.10 லட்சத்தில் முள்ளிமலை முதல் கெட்சுகட்டி வரை குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. கடந்த 2024-25ல் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் முள்ளிமலை கண்டி முதல் உப்படா வரை ரூ.64.25 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய், தடுப்பு சுவருடன் தார்சாலை அமைக்கப்பட்டது.
இதேபோல் கண்டிமட்டம் ஜங்ஷன் முதல் கெட்சுகட்டி ஜங்ஷன் வரை ரூ.25.90 லட்சத்தில் தார்சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய், தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. முக்கியமாக பொதுமக்கள் அத்தியவாசிய குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கலைஞர் நகர்புற சாலை மேம்பாடு திட்டத்தின் மூலம் ரூ.68.80 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
