×

தோகைமலை அருகே சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

தோகைமலை : தோகைமலை ஒன்றிய பகுதிகளில் சோளம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.சோளப்பயிர் வறட்சிகளை தாங்கி வளரு. தண்ணீர் தேங்காத அனைத்து மண்களிலும் சோளம் பயிரிடலாம். சாகுபடி செய்யப்படும் சோளமானது தானியங்களுக்காகவும், வேறு சில கால்நடை தீவனங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சோளப்பயிரானது அனைத்து பகுதிகளிலும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் பயிரிடலாம். அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமானமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது மழை குறைவாக பொழியும் அனைத்து பகுதிகளிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

சோளம் சாகுபடியில் பெரும்பாலும் நாட்டு சோளம் ரகத்தையே விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகை சோளமானது சுமார் 4 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. சித்திரை, மாசி, கார்த்திகை மாதங்களில் சோளம் சாகுபடிக்கு ஏற்ற பருவம். இதில் சித்திரை மாதத்தில் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி காற்றடிக்கும்போது அயல் மரகந்த சேர்க்கை ஏற்படுவதால் மகசூல் கூடுதலாக இருக்கும்.

கவே சித்திரை மாத பட்டமே மிகச்சிறந்தது. ஒரு ஏக்கருக்கு 7 கிலோ விதை சோளம் தேவைப்படுகிறது. விதை நேர்த்தி செய்யப்பட்ட சோள விதைகளை விதைக்க வேண்டும். சோளம் சாகுபடியின்போது ஒரு ஏக்கருக்கு சிறுதானிய நுண்ணுரம் 5 கிலோவுடன் 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் ஈரம் இருக்கும் போது தூவவேண்டும்.

இதேபோல் சாகுபடி செய்யத வயலில் 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. மேலும் ஆட்கள் மூலம் களையை கட்டுப்படுத்தலாம் அல்லது களைக் கொல்லி மருந்துகளை தெளித்து களையை கட்டுப்படுத்து நல்ல மகசூல்பெறலாம்.

Tags : Dogaimalai ,Dokaimala ,Dokaimala Union ,
× RELATED சென்னை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான நீதிக்களம் கருத்தரங்கு