- முன்னாள்
- அமைச்சர்
- உதயகுமார்
- ஜெயலலிதா கோயில்
- திருமங்கலம்
- திமுக
- சிவஜோதி
- மதுரை தெற்கு மாவட்டம்
- சிவநேசன்
- ஜெயச்சந்திரன்…
திருமங்கலம்: முன்னாள் அமைச்சர் உதயகுமார் பணபட்டுவாடா செய்வதாக, திருமங்கலம் தேர்தல் நடத்தும் அதிகாரி சிவஜோதியிடம் திமுக சார்பில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. மதுரை தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞரணி அமைப்பாளர் சிவனேசன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜெயசந்திரன் ஆகியோர், திருமங்கலம் தேர்தல் நடத்தும் அதிகாரி சிவஜோதியிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் பணபட்டுவாடா செய்வதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரி நேற்று மனு அளித்தனர். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதுகுறித்து திமுக வழக்கறிஞரணி அமைப்பாளர் சிவனேசன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்.
ஜெயசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உதயகுமார் திருமங்கலம் தொகுதிக்குட்ப்பட்ட டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோயிலில் சொந்தமாக டிரஸ்ட் வைத்துள்ளார். இங்கு திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய தொகுதிகளின் அதிமுக நிர்வாகிகளை அழைத்து அடிக்கடி கூட்டம் நடத்தி வருகிறார். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அந்த அலுவலகத்திற்கு கட்சியினர், பொதுமக்களை அழைத்து பணப்பட்டுவாடா செய்து வருகிறார். காலை மற்றும் மாலை நேரங்களில் அங்கு வருபவர்களுக்கு உணவும் வழங்கப்படுகிறது. இதுகுறித்து பறக்கும்படையினருக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோயிலில் நடைபெறும் விதிமீறல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதுடன், தேர்தல் முடியும் வரை அந்த கோயிலுக்கு சீல் வைக்க வேண்டுமென மனுவில் தெரிவித்துள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர்.
