- இந்தியா
- பாக்கிஸ்தான்
- எங்களுக்கு
- இஸ்லாமாபாத்
- வெளியுறவு அமைச்சர்
- தேசிய புலனாய்வு இயக்குநர்
- துளசி கபார்ட்
- செனட்
இஸ்லாமாபாத்: இந்தியாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைக்காக பாகிஸ்தான் ஏவுகணை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அந்த நாட்டின் வெளியுறவு அதிகாரி தெரிவித்தார். அமெரிக்காவின் தேசிய உளவு துறை தலைவர் துளசி கபார்ட் 2026ம் ஆண்டுக்கான வருடாந்திர உளவுதுறையின் அச்சுறுத்தல்கள் குறித்து செனட் புலனாய்வு குழுவின் முன் பேசுகையில், ரஷ்யா, சீனா, வட கொரியா, ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள், அமெரிக்காவை தாக்குதல் வரம்பிற்குள் கொண்டுவரக்கூடிய, அணு மற்றும் மரபுவழி ஆயுதங்களைக் கொண்ட பல்வேறு வகையான புதுமையான, மேம்பட்ட ஏவுகணை செலுத்தும் அமைப்புகளை உருவாக்கி வருகின்றன.
பாகிஸ்தானின் நீண்ட தூர ஏவுகணை மேம்பாட்டில், அமெரிக்காவைத் தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும் இடம்பெறக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார். அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தயாரிப்பது அமெரிக்காவின் தேசிய உளவு துறை தலைவர் துளசி கபார்ட் கூறியதை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு துறை அதிகாரி தாஹிர் உசைன் ஆண்ட்ராபி கூறியதாவது: இது முற்றிலும் தற்காப்புத் தன்மையுடையது. தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதையும், தெற்காசியாவில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதை நோக்கமாகக் கொண்டது. பாகிஸ்தானின் ஏவுகணைத் திட்டம் இந்தியாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது.கண்டம் விட்டு கண்டம் பாயும் வரம்பை விட மிகவும் குறைவாக உள்ள அதன் ஏவுகணைத் திட்டம், இந்தியாவிற்கு எதிரான நம்பகமான குறைந்தபட்ச தடுப்பு நடவடிக்கை என்ற கோட்பாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. 12,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் செல்லக்கூடிய ஏவுகணைத் திறன்களை இந்தியா உருவாக்குவது, பிராந்தியப் பாதுகாப்பு அம்சங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பயணப் பாதையைப் பிரதிபலிக்கிறது. மேலும் இது நிச்சயமாக அண்டை நாடுகளுக்கும் இதர நாடுகளுக்கும் கவலையளிக்கும் விஷயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
