×

உலக சந்தையில் கச்சா எண்ணெயை விற்பனை செய்ய 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி : ஈரான் விற்க மறுப்பு!!

வாஷிங்டன் : உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெயை விற்பனை செய்ய 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரினால் உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் விலைகளைக் குறைக்கும் முயற்சியாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், கடல் வழியாக ஈரானின் கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்வதற்கான தடைகளை 30 நாட்களுக்குத் தளர்த்தியது. அமெரிக்கா அனுமதியால் கப்பல்களில் உள்ள 14 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ஈரானின் கச்சா எண்ணெய்க்கு விதித்த வர்த்தக தடையை அமெரிக்கா தளர்த்தியும் ஈரான் விற்க மறுப்பு தெரிவித்துள்ளது. ஒரு மாதத்துக்கு கச்சா எண்ணெயை ஈரான் விற்றுக் கொள்ளலாம் என்று அமெரிக்கா அறிவித்த நிலையில், சர்வதேச சந்தைக்குக் கூடுதல் கச்சா எண்ணெயைவழங்குவதற்குத் தங்களிடம் விற்பதற்கு உபரியாக கச்சா எண்ணெய் இருப்பு ஏதும் இல்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனிடையே இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியாவில் அமைந்துள்ள அமெரிக்க-பிரிட்டன் கூட்டு ராணுவத் தளத்தின் மீது ஈரான் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Tags : US ,Iran ,Washington ,United States ,Israel ,President Trump ,
× RELATED இந்தியாவின் மொத்த 108 ஆம்புலன்ஸ்...