×

கறம்பக்குடி பகுதியில் பூத்து குலுங்கும் செண்டி பூக்கள்

கறம்பக்குடி : நாஞ்சிக்கோட்டை பகுதியில் செண்டி பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. செண்டி பூக்கள் மூலம் குறைந்த காலத்தில் நிறைவான லாபம் கிடைப்பதாக விவசாயிகள் கூறினர். தமிழகத்தில் பூக்கள் அதிகம் சாகுபடி செய்யும் மாவட்டங்களில் மதுரை மாவட்டம் முதலிடத்தை பெற்று உள்ளது. மதுரை மாவட்டத்தில் மல்லிகை, ரோஜா, சாமங்கி ஆகிய பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வருகின்றனர்.

இதைப்போல சேலம், ஓசூர், திண்டுக்கல், நாமக்கல், கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளிலும் விவசாயிகள் அதிக அளவில் பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, மழையூர், வெட்டான்விடுதி, கருக்காகுறுச்சி, வாண்டான் விடுதி, பட்டத்திக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது விவசாயிகள் செண்டி பூக்களை சாகுபடி செய்து வருமானத்தை ஈட்டுகின்றனர்.

செண்டி பூக்கள் சாகுபடி காலம் 50 நாட்கள் ஆகும். பின்னர் பூக்களை விவசாயிகள் பறிக்க தொடங்குவார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி பகுதிகளில் கிணறு, பம்பு செட்டு வசதியுடைய விவசாயிகள் செண்டி பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதற்காக ஓசூரில் இருந்து செடிகளை வரவழைத்து வயல்களில் நடவு செய்து விடுகின்றனர்.

செடிகளுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டிய சூழல் உள்ளதால் தண்ணீர் பாய்ச்சி அதன் பிறகு 15 நாட்களில் உரங்களை தெளித்து செடிகளை நன்கு வளர்ந்த பின்னர் 40-45 நாட்களில் பூக்கள் அறுவடைக்கு தயாராகிறது. ஒருகிலோ ரூ.50முதல் 55வரை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

Tags : Karambakkudi ,Nanjikottai ,Madurai ,Tamil Nadu ,Madurai… ,
× RELATED பெரம்பலூரில் 57 பள்ளிவாசல்களில்...