*பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம்
செய்யாறு : செய்யாறில் வரும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நாடக கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. செய்யாறில் ஆரணி கூட்ரோடு பஸ்நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அவசியத்தை வலியுறுத்தி நாடக கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செய்யாறு தொகுதி தேர்தல் பார்வையாளர் ராமகிருஷ்ணன் சிந்தூரி, தேர்தல் நடத்தும் அலுவலர் அம்பிகா ஜெயின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் வரும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி பொதுமக்களுக்கு நாடக கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
மேலும் வாக்களிப்பது எனது கடமை என்ற துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. உதவி தேர்தல் அலுவலர்கள் துளசி ராம், அசோக்குமார், தாசில்தார்கள் பெருமாள், பாஸ்கர், பொன்னுசாமி, பிடிஓ வெங்கடசேன், நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
