ராணிப்பேட்டை வார சந்தையில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

*விவசாயிகள் மகிழ்ச்சி

ராணிபேட்டை : ராணிப்பேட்டை வாரசந்தையில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. இதனால், ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த மகிழ்ச்சியடைந்தனர்.ராணிப்பேட்டை வாரசந்தையில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை வாரசந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சுமார் 155 வருடங்கள் பழைமை வாய்ந்த இந்த வார சந்தை மைதானத்தில் வெள்ளிக்கிழமை தோறும் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மாநிலம், சித்தூர் பகுதியில் இருந்தும், வியாபாரிகள் ஆடுகள் வகையான வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் காய்கறிகள், கொண்டு வந்து சிறப்பான முறையில் விற்பனை செய்துவிட்டு செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்தநிலையில், நேற்று வெள்ளிக்கிழமை வழக்கம் போல் வாரசந்தையில் காய்கறி, பழங்கள், ஆடுகள், கோழி விற்பனைக்கு வந்தது. மேலும், ரம்ஜான் பண்டிகை இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளதால், பல்வேறு பகுதிகளில் இருந்து ராணிப்பேட்டை வாரசந்தையில் சுமார் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இந்த ஆடுகளை சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் போட்டி போட்டு ஆடுகளை, வியாபாரிகள் வாங்கினர். இந்த சந்தையில் ஒரு ஆடு ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும், சுற்று வட்டாரத்தை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் ரம்ஜான் பண்டிகைக்கு ஆடுகளை வாங்கி சென்றனர்.

இந்த ஆடுகள் சுமார் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், பணத்தை அதிகளவில் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஆடுகளை குறைவாக வாங்கி செல்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும், ஆடுகல் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதால், ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: