இன்ஜினியர் மர்மச்சாவு கிணற்றில் சடலமாக மீட்பு

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 21: பாப்பிரெட்டிப்பட்டி அருகே மெணசி துறையூர் பகுதியைச் சேர்த்தவர் தங்கராஜ் (56). இவர் குடும்பத்துடன் கோவையில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மகன் கார்த்திக்(26). சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ள கார்த்திக் கடந்த 2 நாட்களுக்கு முன் துறையூரில் உள்ள வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் மாலை, வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் சடலமாக மிதந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரித்து வருகின்றனர்.

Related Stories: