குருபரப்பள்ளியில் தொழிலாளி மாயம்

கிருஷ்ணகிரி, மார்ச் 20: கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே பந்தப்பள்ளி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன்(46), கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழரசி, போலுப்பள்ளியில் உள்ள தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நரசிம்மன் கடந்த 5 மாதமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி காலை, வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், தமிழரசி நேற்று முன்தினம் குருபரப்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: