தேர்தல் புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை எண் வெளியீடு

கிருஷ்ணகிரி, மார்ச் 20: கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக பொதுமக்கள், 1800 425 7076, 04343 – 225007, 225008, 225009 மற்றும் 225015 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். இதே போல், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊத்தங்கரை (தனி) தொகுதிக்கு 04341- 220028, பர்கூர் தொகுதிக்கு 63823 93994, கிருஷ்ணகிரி தொகுதிக்கு 04343 – 236733 என்கிற எண்களில் தெரிவிக்கலாம். மேலும், வேப்பனஹள்ளி தொகுதிக்கு 04344 -292098, ஓசூர் தொகுதிக்கு 04343 – 222622, தளி தொகுதிக்கு 04347- 235041 எண்களில் தேர்தல் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். எனவே, சட்டப்பேரவை தேர்தல் விதிமீறல்கள் உள்ளிட்ட அனைத்து புகார்களையும், மாவட்டம் மற்றும் அந்தந்த சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கட்டுப்பாட்டு அறை எண்களில் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: