திருவாடானை பகுதியில் போக்குவரத்தை சரி செய்ய கோரிக்கை

திருவாடானை, மார்ச் 20: திருவாடானை வடக்குத் தெருவில் சாலையோர ஆக்கிரமிப்பால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. போலீசார் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருவாடானை வடக்குத்தெரு வழியாக வழியாக தொண்டி- மதுரை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளதால், வாகன ஓட்டிகள் தங்களது டூவீலர்கள் மற்றும் கார்களை போக்குவரத்து விதியை மீறி சாலையின் அருகிலேயே நிறுத்தி விட்டு கடைகளுக்கு செல்வதால் போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுகிறது.

மேலும் அப்பகுதியில் செயல்படும் தேசிய வங்கிக்கு தினசரி வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை அவசரகதியில் சாலை ஓரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துவதால் அவ்வழியாக சாலையில் செல்லும் வாகனங்களுக்கு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த தினங்களிலும், கோவில் திருவிழா நாட்களிலும் அப்பகுதியில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விடும்.

ஆகையால் இந்த வடக்குத் தெருவில் தொண்டி – மதுரை வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் வாகன போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டுமெனவும், சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்து விதியை மீறாமல் கடைகளின் முன்பு வாகனங்களை நிறுத்தும் வகையில் காவல்துறையின ர் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அப்பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: இந்த பிரதான சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர்.

மேலும் பண்டிகை மற்றும் சுப முகூர்த்த நாட்களிலும், கோயில் திருவிழா காலங்களிலும் இப்பகுதியில் வாகனங்கள் அதிகளவில் செல்வதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள தேசிய வங்கி, கடைகளின் முன்பும் போக்குவரத்து விதியை மீறி பொதுமக்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.இதனால் வடக்குத் தெருவில் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமெனவும், சாலையின் இருபுறங்களிலும் கடைகளின் முன்பு நிறுத்தப்படும் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு எற்படுத்தாமல் நிறுத்தும் வகையில் காவல்துறையினர் அறிவுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறினர்.

Related Stories: