ஈரானின் ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பு வழங்க தயார் என்று நேட்டோ நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல உதவ தயார் என நேட்டோ நாடுகள் அறிவித்துள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஜப்பான் நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாக எதிரி நாட்டு கப்பல் சென்றால் தாக்கப்படும் என ஈரான் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. ஈரானின் எச்சரிக்கையால் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடைபட்டதால் நேட்டோவுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். டிரம்ப் அழைப்பை நேட்டோ நாடுகள் முதலில் நிராகரித்த நிலையில் தற்போது உதவ தயார் என அறிவித்துள்ளது.
