சுவர் விளம்பரம் எழுதுவதில் ஆர்வம் காட்டும் திமுகவினர்

போச்சம்பள்ளி, மார்ச் 12: தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், போச்சம்பள்ளி பகுதியில் முன்கூட்டியே சுவர் விளம்பரம் எழுதுவதில் திமுகவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார். அத்துடன் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறார். ஒவ்வொரு வீடாக சென்று, தமிழக அரசின் சாதனைகள் குறித்தும், பொதுமக்களுக்கு வழங்கி வரும் சலுகைகள் குறித்தும் விளக்கி கூறி “உதயசூரியன்’’ சின்னத்திற்கு திமுகவினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் எழுதும் பணியில் திமுக நிர்வாகிகள் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் தேதி, வேட்பாளர் அறிவிக்காத நிலையில் திமுகவினர் தற்போதே தேர்தல் பிரசாரத்தை துவங்கி தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

Related Stories: