ஆந்திராவில் அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண திட்டம்: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கினார்

திருமலை: ஆந்திராவில் அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்தார். ஆந்திராவில் கடந்த தேர்தலின்போது மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் திட்டம் அமல்படுத்தப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் `திவ்யாங் சக்தி’ என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயண திட்ட தொடக்கவிழா மங்களகிரியில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் சந்திரபாபுநாயுடு, துணைமுதல்வர் பவன்கல்யாண், அமைச்சர் நாரா.லோகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் அரசு பேருந்தில் முதல்வர், துணைமுதல்வர் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச டிக்கெட் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர். மேலும் மங்களகிரியிலிருந்து பெனுமக்கா வரை அவர்கள் பயணம் செய்தனர். மேலும் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் பேருந்தில் கலந்துரையாடினர்.

குறிப்பாக இந்த திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்களுக்கும் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Related Stories: