- டிட்ட்கோ
- அமைச்சர்
- டி. ஆர். பி. ராஜா
- சென்னை
- தொழில்கள்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்தியா
- தமிழ்நாடு அரசு
சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் அதிக ஸ்டாப்அப் நிறுவனங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. ஸ்டார்ட்அப்நிறுவனங்களுக்கு தமிழக அரசு உதவி செய்கிறது. தற்போது, தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.தனியார் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மீது அரசு நிறுவனமான டிட்கோ பங்குரிமை அடிப்படையில் முதலீடு செய்துள்ளது.
முதல் கட்டமாக ‘அக்னி கூல்’ ஸ்டாப்அப் மற்றும் ‘ராப்டி’ ஸ்டாப்அப் நிறுவனங்கள் மீது முதலீடு செய்யப்பட்டுள்ளது. அக்னி கூல் நிறுவனம் ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. ராப்டி நிறுவனம் DC மோட்டரில் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கிறது. இரு நிறுவனங்கள் மீதும் தலா ரூ.25 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ‘‘Product nation tamilnadu” என்ற அடிப்படையில் பணிகளை முன்னெடுத்துள்ளோம். பங்குரிமை அடிப்படையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் தொழில் நுட்பம், மதிப்பு கூட்டப்பட்பட்ட வேளாண் பொருட்கள் போன்ற ஸ்டாப்அப் நிறுவனங்களை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
