ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 422 விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இரவு தனுஷ்கோடி அருகே கடல் எல்லையோரம் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 4 படகுகளில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் வலைகளை கடலிலேயே வெட்டிவிட்டு தப்பினர். வரப்பிரசாதம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அதிலிருந்த மீனவர்கள் சுமன்ஸ்டன் (35), மினிட்டோ ராயப்பன் (40) ஆகியோரை கைது செய்தனர்.
