நீடாமங்கலம், மார்ச் 14: நீடாமங்கலம் வட்டாரம் கோவில்வெண்ணி கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் பண்ணை பள்ளி நடைபெற்றது. இதில் வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் விஜயலட்சுமி, வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார், வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையம் கருணாகரன், உதவி வேளாண்மை அலுவலர் மதுமிதா மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் அருள்செல்வி, மற்றும் விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
