கணவருடன் தகராறால் தீக்குளித்த பெண் சாவு

சேலம், மார்ச் 14: சேலம் பள்ளப்பட்டி ஜவகர்மில் சந்து பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (38). மதுகுடிக்கும் பழக்கம் கொண்ட கோபி, தினமும் மனைவியிடம் தகராறில் ஈடுபடுவார். கடந்த 3ம்தேதி இவ்வாறு தகராறு ஏற்பட்டதால் பாக்கியலட்சுமி உடலில் தின்னரை ஊற்றி தீ வைத்து கொண்டார். படுகாயம் அடைந்த அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: