முதல்நிலை நூலகர், ஆய்வாளர்கள் மாவட்ட நூலகர்களாக பதவி உயர்வு தமிழக அரசு உத்தரவு தமிழகத்தில் 26 மாவட்டங்களின்

வேலூர், மார்ச் 14: தமிழகம் முழுவதும் 26 மாவட்டங்களின் முதல்நிலை நூலகர் மற்றும் நூலக ஆய்வாளர்கள் மாவட்ட நூலகர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதன்படி, வேலூர் முதல்நிலை நூலகர் கே.ஆர்.பழனி, அதே அலுவலகத்தில் மாவட்ட நூலகராக பதவி உயர்வு பெற்றுள்ளார். பெரம்பலூர் முதல்நிலை நூலகர் எஸ்.முத்துக்குமரன் தேனி மாவட்ட நூலகராகவும், நாமக்கல் முதல்நிைல நூலகர் எஸ்.தேன்மொழி, அரியலூர் மாவட்ட நூலகராகவும், திருச்சிராப்பள்ளி முதல்நிலை நூலகர் எஸ்.தனலட்சுமி தஞ்சாவூர் மாவட்ட நூலகராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். கள்ளக்குறிச்சி முதல்நிலை நூலகர் எம்.காசிம், மயிலாடுதுறை மாவட்ட நூலகராகவும், திருவாரூர் மாவட்ட முதல்நிலை நூலகர் பி.முத்து, புதுக்கோட்டை மாவட்ட நூலகராகவும், கோயம்புத்தூர் நூலக ஆய்வாளர் கே.கணேசன், அதே மாவட்ட நூலகராகவும், திருநெல்ேவலி முதல்நிலை நூலகர் திருஞானசம்பந்தம், சிவகங்கை மாவட்ட நூலகராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதேபோல், கிருஷ்ணகிரி நூலக ஆய்வாளர் எல்.சக்திவேல் ராணிப்பேட்டை மாவட்ட நூலகராகவும், ராணிப்ேபட்டை மாவட்ட நூலக ஆய்வாளர் இ.கணேசன், திருப்பத்தூர் மாவட்ட நூலகராகவும், சென்னை நூலக ஆய்வாளர் எம்.சந்தானலட்சுமி, கிருஷ்ணகிரி மாவட்ட நூலகராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பி.சந்தரமோகன் பிறப்பித்துள்ளார்.

Related Stories: