மன்னார்குடி, மார்ச். 14: மன்னார்குடி நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச் சாலை ஒன்றை அமைத்து தரவேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. இது தொடர்பாக தொகுதி எம்எல்ஏவும், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சருமான டிஆர்பி ராஜா மேற்கொண்ட தொடர் முயற்சி காரணமாக இதற்கான உத்தரவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்தார்.
