விராலிமலை, மார்ச் 14: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் டிரான்ஸ்பார்மர்கள் பராமரிப்பின் போது ஏற்படும் மனிதப் பிழைகளைத் தவிர்க்கவும், மின் விபத்துக்களைக் குறைக்கவும், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் தமிழ்நாடு முழுவதும் மின்துறை நடத்தி வருகிறது. நிகழ்வில், பழுதடைந்த டிரான்ஸ்பார்மர் களைக் கையாளும் போது உரிய பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துதல் மற்றும் முறையான நடைமுறைகளைப் பின்பற்றுவது குறித்து இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
விராலிமலை அருண்கார்டன் அருகே 250 கேவி (கிலோவோல்ட்-ஆம்ப்யர்) திறன் கொண்ட டிரான்ஸ்பார்மரில் நேற்று செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
