மயிலாடுதுறையில் குண்டாசில் கஞ்சா வியாபாரி கைது

 

மயிலாடுதுறை, மார்ச் 14: மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவல்துறையினர் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாப்படுகை, கவரத்தெருவை சேர்ந்த குகன்(24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், குகன் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் குகன் மீது ஏற்கனவே 6 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. மேலும் குகன் தொடர்ந்து கஞ்சா விற்பனை, குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட எஸ் பி ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்

Related Stories: