சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகள் மற்றும் நலத்திட்டங்களை திறம்பட நிர்வகிக்கவும் கண்காணிக்கவும் ஒருங்கிணைந்த சேவை மையங்களில் செயல்பாடுகளை மேலாண்மை செய்யவும் சமூக பாதுகாப்பு வழங்கல் அமைப்பு என்ற முழுமையான இணையதளத்தின் முதல் பதிப்பினை தலைமை செயலாளர் முருகானந்தம் நேற்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகள் மற்றும் நலத்திட்டங்களை திறம்பட நிர்வகிக்கவும், கண்காணிக்கவும், ஒருங்கிணைந்த சேவை மையங்களின் செயல்பாடுகளை மேலாண்மை செய்யவும் ‘சமூக பாதுகாப்பு வழங்கல் அமைப்பு’ என்ற முழுமையான இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தின் மூலம் அரசு மற்றும் மறுவாழ்வு சேவைகள் வழங்கும் செயல்முறைகள் ஒரே மாதிரியாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன் பணிகளின் முன்னேற்றத்தை உடனடியாக கண்காணிக்க முடியும்.
மேலும், களப் பணியாளர்கள், சேவை மையங்கள் மற்றும் அரசுத் துறைகள் இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைகள் வெளிப்படையாகவும் விரைவாகவும் சென்றடைய உதவுகிறது.
நேற்று தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முருகானந்தம் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகள் மற்றும் நலத்திட்டங்களை திறம்பட நிர்வகிக்கவும் கண்காணிக்கவும் ஒருங்கிணைந்த சேவை மையங்களில் செயல்பாடுகளை மேலாண்மை செய்யவும் ‘சமூக பாதுகாப்பு வழங்கல் அமைப்பு’ என்ற முழுமையான இணையதளத்தின் முதல் பதிப்பினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் மதுமதி, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் லக்ஷ்மி, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை முதன்மை செயல் அலுவலர், இயக்குநர் மின் ஆளுமை ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
