களக்காடு தலையணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

களக்காடு, மார்ச் 14: களக்காடு தலையணைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது. களக்காடு புலிகள் காப்பகத்திற்குள்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. இங்கு மூலிகைகளை தழுவியபடி அதிக குளிர்ச்சியுடன் ஓடும் தண்ணீரில் குளிக்க தினசரி சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் தலையணையில் யானைகள் நடமாட்டம் காணப்பட்டதால் கடந்த 10ம்தேதி முதல் சுற்றுலா பயணிகள் தலையணைக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதற்கிடையே யானைகள் கூட்டம் மீண்டும் அடர் வனப்பகுதிக்கு சென்றது. இதையடுத்து சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 3 நாட்களுக்கு பின் நேற்று முதல் விலக்கி கொள்ளப்படுவதாக வனசரகர் பிரபாகரன் அறிவித்தார். இதனைதொடர்ந்து தலையணைக்கு செல்லவும், குளிக்கவும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: