மதுரை, மார்ச் 13: மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில், கொடுத்த பணத்தை கேட்டவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மதுரை, ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர் 2வது தெருவை சேர்ந்த பரமசிவன் மகன் மாரிமுத்துக்குமார்(40). இவர் அப்பகுதியில் தந்தையுடன் டீக்கடை நடத்தி வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்(55). இவர் இதே பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவருக்கும் மாரிமுத்துக்குமாருக்கும், இடையே கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 10ம் தேதி மாரிமுத்துகுமார், ஸ்டுடியோவிற்கு சென்று மணிமாறனிடம் தான் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார்.
அப்போது மணிமாறன் தாக்கியதில் காயமடைந்த மாரிமுத்துக்குமாலை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் மாரிமுத்துகுமார்அளித்த புகாரின் பேரில், ஜெய்ஹிந்த்புரம் போலீசார் மணிமாறன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
