×

சோஷியல் மீடியாக்கள் மூலம் பிரசாரம் செய்தாலும் செலவு கணக்கில் வரும்: தேர்தல் அதிகாரிகள் அதிரடி

கோவை: தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எல்லா அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆன்லைன், சோஷியல் மீடியாக்கள் மூலமாகவும் பிரசாரம் செய்து வருகிறார்கள். குறிப்பாக பேஸ்புக்கில் அரசியல் கட்சி, தலைவர்களை விமர்சித்து பல லட்சம் கமென்ட் குவிவதால் கண்காணிக்க முடியாமல் தேர்தல் பிரிவு திணறுகிறது. கட்சி, நிர்வாகிகள், தேர்தல் கமிஷன், ஓட்டு தொடர்பான விவகாரங்களை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மீடியா மானிட்டர் பிரிவு உருவாக்க ஏற்பாடு நடக்கிறது. ஓட்டு கேட்டு குவியும் பதிவுகள், செல்போன் எஸ்எம்எஸ் போன்றவற்றையும், விதிமுறை மீறல்களையும் கண்காணிக்கும் வகையில் மீடியா மானிட்டர் பிரிவு இருக்கும். இதில் உள்ள விவரங்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி வைக்கப்படும்.

தேர்தல் பிரிவினர் கூறுகையில், ‘‘பறக்கும் படைகள், மீடியா குழுக்கள் தயார் செய்யப்படும். இதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் பணி நடக்கிறது. எப்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தாலும், அதே நேரத்தில் இந்த சிறப்பு குழுக்கள் பயன்பாட்டிற்குள் கொண்டு வர தயார் நிலையில் இருக்கிறது. இதற்கான கண்காணிப்பு கருவிகள், 24 மணி நேர மையம் அமைக்கப்படவுள்ளது. மக்களை நேரடியாக சந்திக்க முடியாமல் சோஷியல் மீடியா மூலமாக தகவல் அனுப்புவது அதிகமாக நடக்கிறது. பல லட்சம் பேரின் செல்போன் எண்களுக்கு தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் பேசும் வீடியோ, குரல் பதிவுகள் அடிக்கடி அனுப்பி வைக்கப்படுகிறது. இவை எல்லாம் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர், எங்களின் பதிவேட்டிற்கு வந்து விடும். அவையும் செலவு கணக்கில் சேர்த்துவிடுவோம் ’’ என்றனர்.

Tags : KOWAI ,Facebook ,
× RELATED ஓபிசி வருமான வரம்பு தொடர்பான...