திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசலை கேன்களில் வழங்கக் கூடாது என அனைத்து பங்க்-களுக்கும் மாவட்ட ஆட்சியர் மோகனச் சந்திரன் உத்தரவிட்டுள்ளார். எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தால் பலரும் அதிகளவில் பெட்ரோல், டீசலை வாங்கிச் செல்வதால், அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
