×

பொன்னேரி அருகே ஆலையில் இருந்து சிலிண்டர் சப்ளை பாதியாக குறைப்பு: லாரி டிரைவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

பொன்னேரி: பொன்னேரி அருகே அத்திப்பட்டு புதுநகரில் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமான இன்டேன் எரிவாயு நிரப்பும் ஆலையில் இருந்து நாள்தோறும் சுமார் 200க்கும் மேற்பட்ட லாரிகளில் வீட்டு உபயோக மற்றும் வர்த்தக ரீதியிலான சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, இந்த எரிவாயு நிரப்பும் ஆலையில் இருந்து நேற்று 3வது நாளாக வர்த்தகரீதியான சிலிண்டர்களின் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வீடுகளில் பயன்படுத்தப்படும் சிவப்பு நிற சிலிண்டர்கள் மட்டும் ஆலையிலிருந்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 240 லோடுகள் வரை சென்று கொண்டிருந்த நிலையில், நேற்று முதல் நாளொன்றுக்கு 120 லோடுகள் மட்டுமே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் லாரிகளில் ஏற்றி அனுப்பப்படுவதாகவும் நாள்தோறும் லாரிகளில் வந்து சிலிண்டர் லோடு ஏற்றி செல்லும் நிலையில், தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே சிலிண்டர் லோடு வழங்கப்படுகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், தற்போது சிலிண்டர் லோடுகள் 50 சதவீதம் குறைக்கப்பட்டதால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டு செலவு, குழந்தைகளின் படிப்பு செலவை சமாளிக்க முடியாமல் பெரிதும் அவதிக்கு ஆளாகி வருவதாக லாரி டிரைவர்கள் தெரிவித்தனர்.

Tags : Bonneri ,OIL ,
× RELATED சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை;...