திருச்செந்தூர், மார்ச் 12: திருச்செந்தூர் அருகே மேய்ச்சலுக்கு சென்ற 3 பசு மாடுகள் மின்சாரம் பாய்ந்து பலியானது. திருச்செந்தூர் பகுதியில் நேற்று அதிகாலை முதல் காலை 11 மணி வரை பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் கீழநாலுமூலைக்கிணறு பகுதியை சேர்ந்த ராஜ் மற்றும் முருகேசனுக்கு சொந்தமான பசு மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றுள்ளன. அப்போது அங்கு சாலையோரத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் அருகில் சென்ற 3 மாடுகளும் மின்சாரம் பாய்ந்து அங்கேயே உயிரிழந்தன. சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
